அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வெற்றியூர் என்ற கிராமத்தில் நாட்டு பட்டாசுகளை தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் தீ விபத்து காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் அவரது மருமகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். வெடி விபத்தில் 9 பைக்குகள் மற்றும் ஒரு டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சேதமானது.