சென்னை அருகே ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூரில் ஆணழகன் போட்டிக்காக தயாராகி கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் யோகேஷ் (41) குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது சோர்வடைந்ததால் குளிக்க சென்ற யோகேஷ், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், ஜிம்மில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். மயங்கி கிடந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.