பொள்ளாச்சியில்  இளைஞர் ஒருவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பூச்சி மருந்து குடித்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

கோவை மாவட்டம் புறநகர் பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் வயது (35) என்பவர் நேற்று 2:30 மணியளவில் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ராயல் காஸ்டில் அரை எடுத்து தங்கி உள்ளார்.. இந்நிலையில் அடுத்த நாள் (இன்று) செக் அவுட் செய்யசென்ற போது அவர் வெளியே வராததால் ஹோட்டலில் வேலை செய்பவர்கள் நீண்ட நேரமாக வெளியே வராத காரணத்தால் உள்ளே சென்று பார்த்தபோது இறந்த நிலையில் கிடந்துள்ளார்..

இதையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை கொண்டதில் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அதன்பின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் முதல் கட்ட விசாரணைக் கொண்டதில் அவருக்கு கடன் இருந்த நிலையில் மன வேதனை அடைந்து தற்கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது..

முதற்கட்ட விசாரணையில் அவர் கிரிக்கெட் சம்பந்தமான செயலியில் பல லட்சம் பணங்களை இழந்ததாகவும்,  ரூ 90 லட்சம் ரூபாய் வரை இழந்ததாகவும், அதில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக  எந்த மாதிரியான அவர் செயலியை பயன்படுத்தினார்? மேலும் சில பணங்களை இழந்துள்ளாரா?  நெருக்கடிகள் ஏதும் வந்ததா என பல்வேறு கோணங்களில் இரத்தினபுரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..