அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1 கிராம் தங்கம் வழங்கப்படும் என தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023 – 2024-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தங்க காசுகள் பரிசுகள் வழங்கப்படும் என அந்தப்பள்ளியின்  தலைமை ஆசிரியர் இந்திரா அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து பேசிய தலைமை ஆசிரியர் இந்திரா, தங்களுடைய பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த முன்னெடுப்பை கையிலெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்ர்.