ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் தற்கொலை செய்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் அதற்கு தடை விதிக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு ஆன்லைன் சூத்தாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில் கோவையில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பல லட்சத்தை இழந்த சபாநாயகம் (35) என்ற இளைஞர் விஷம் குடித்து தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு சமீபத்தில் தடை விதித்த நிலையில் இப்படியொரு மரணம் நிகழ்ந்து இருக்கிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.