தமிழ் சினிமாவில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில்நீங்கா  இடத்தை  பிடித்த கவிஞர் வைரமுத்து பல முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது இவர் பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். இந்நிலையில்  வைரமுத்து திரைப்பாடல்களில் ‘புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஆட்டோ ஓட்டுநர் லூர்துராஜூக்கு வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “லூர்துராஜ் ஓர் ஆட்டோ ஓட்டுநர்  வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள் என்ற தலைப்பில் ஆய்வுசெய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். வியந்து போனேன், வீட்டுக்கு அழைத்துபாராட்டினேன். ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம். வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.