தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் கூட்டணி வைத்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பின் விஜய்யை வைத்து 3 படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் ஆனார்.

தற்போது, அவர் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.  ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தான் அடுத்து படத்தை இயக்க உள்ளதாகவும், அதற்காக கதை சொல்ல அட்லீ, அல்லு அர்ஜுனிடம் நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.