இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை  மகனும் நடிகருமான விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நேற்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், தந்தை எஸ்ஏசி மற்றும் தாயார் சோபனா ஆகியோரை அவர்களது வீட்டில் சந்தித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளாக விஜய் தனது தந்தை மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் தன்னை சந்திக்க வந்துள்ளதால், எஸ்ஏசி மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.