ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மதியழகன் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டாமல் பணத்தை திருப்பி தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும், தயாரிப்பாளர் மதியழகன் புகார் அளித்துள்ளார். இதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் நடிகர் அதர்வாவிற்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.