கரூரில் அனுமதி இல்லாமல் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்தி கிராமம் EB காலனி பகுதியிலுள்ள நாகேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்காக மின்தேவை பூர்த்தி செய்யும் அடிப்படையில் ஜெனரேட்டர் பயன்படுத்தாமல், அருகிலுள்ள மின் கம்பத்தில் இருந்து ஒயர் வாயிலாக மின்சாரம் திருடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.