நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலியில் அடிக்கல் நாட்டினார்.

தொல்லியல் துறை சார்பாக ரூ.33.2 கோடி செலவில் நவீன வசதியுடன் பொருநை அருங்காட்சியகமானது உருவாகிறது. பாளையங்கோட்டை வட்டம் குலவணிகர் கிராமத்தில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கண்டெடுத்த பொருட்களை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.