சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருளாயி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ஆலை மேற்பார்வையாளரை கைது செய்த போலீசார். உரிமையாளரை தேடி வருகின்றனர்.