கடல் வழியே மதுபானம் கடத்துவதை தடுக்க மீன்பிடி படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மீன்பிடி படகுகளை பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிக்க காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் அறிவித்துள்ளார். இதன் மூலமாக கடல் வழியே நடைபெறும் கடத்தல்கள் தவிர்க்கப்படும். இதனைத் தொடர்ந்து அரசு புலனாய்வு சேவை மற்றும் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையின் மூலம் பெருந்தொகை போதைப் பொருட்களை ஏற்றி சென்ற உள்ளூர் மீன் பிடி இழு படகு ஒன்று கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.