தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை, அரூர் சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்ற வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இறக்கிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. போக்குவரத்து கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.