தமிழகத்தில் மலைப்பகுதிகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மலைப்பிரதேசங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது மகளிர் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகின்றனர். இதனை விரிவு செய்யும் வகையில் மலைப்பகுதிகளிலும் கட்டணம் இல்லா பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.