ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குழுவாக செயல்படவில்லை என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு கிடையாது. மும்பை அணியில் தரமான வீரர்கள் இடம் பெற்ற போதிலும் அவர்கள் குழுவாக செயல்படவில்லை.

இவ்வளவு சிறப்பான வீரர்களை வைத்துக் கொண்டு நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அந்த அணி பிளவு பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் அணியில் ஏதோ ஒன்று சரி இல்லை. ஐபிஎல் போன்ற மிகப்பெரிய கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அவர்கள் ஒற்றுமையாக குழுவாக செயல்பட வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாட கூடாது. அவர்கள் விரைவில் குழுவாக செயல்பட்டு வெற்றி முகத்திற்கு திரும்புவார்கள் என்று நினைக்கிறேன். மேலும் அவர்கள் என்னை பொறுத்தவரை பிளே ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.