ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் மே 1ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் தங்கள் வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் டி20 உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.