ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.