மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு இருவரும் சிறுமியை கைவிட்டு உள்ளனர்.

இதில் பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரிடம் இருந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அவருடைய மாமா 4 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு குழந்தையை விற்பனை செய்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், மாமா மற்றும் இரண்டு மருத்துவர்கள் உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்