பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள்  உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவீட் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, பிரேசிலியாவில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாச வேலைகள் குறித்த செய்திகள் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. மேலும் ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசிலில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம் என அவர் பதிவிட்டுள்ளார்.