மராட்டியத்தின் மும்பை நகரில் புறநகர் ரயிலில் தினசரி வேலை மற்றும் படிப்பிற்காக ஏராளமான பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட உள்ளூர் ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனைகள் இரண்டு பேர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கஜிராத் பகுதியை சேர்ந்த பெங்கிராய் எனும் இளம் பெண் ஒருவர் அந்த ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த இளம் பெண் திடீரென வலியால் முனகியுள்ளார். இதனை கவனித்த டிக்கெட் பரிசோதகர்கள் இரண்டு பேரும் அந்த பெண்ணிடம் சென்றுள்ளனர். பின்னர் நிலைமையை கவனித்த அவர்கள் தானே ரயில் நிலைய மேலாளரிடம் தகவல் தெரிவித்து மருத்துவ உதவி கேட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலைமை மோசமடையவே ரயில்வே போலீசார் மற்றும் பயணி ஒருவர் உதவியுடன் அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், இதனையடுத்து ஐ.சி.யூ வில் சேர்க்கப்பட்டார். அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் டிக்கெட் பரிசோதர்களான தீபா வைத்தியா  மற்றும் ஜெயின் மார்செல்லா இருவரும் சரியான நேரத்தில் உதவியதற்காக அவரது தாயார் அவர்களுக்கு நன்றியை கூறியுள்ளார்.