மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி வருகின்றது. இதில் பெண்கள் பல பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது மத்திய அரசின் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் பெண்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை இருந்தால் அவர்களுக்கு 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி தொகை பெண்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் இந்த பயிற்சி மூலம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க இது வழிவகை செய்யும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.