இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது எஸ் பி ஐ வங்கியில் சிறப்பு வைப்பு திட்டம் அம்ரித் கலாஷ் திட்டத்தின் காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது.

மொத்தம் 400 நாட்கள் கொண்ட இந்த திட்டம் மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீத வட்டியும் மற்றவர்களுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருமான வரி சட்டத்தின்படி டிடிஎஸ் வரி வட்டியில் கழிக்கப்படும்.