உத்தர பிரதேச மாநிலம் ராஸ்ரா பகுதியில் டாக்டர் அம்பேத்கர் உருவம் பொரித்த கொடியை மூன்று பேர் பிடுங்கி காலால் மிதித்து அவமதித்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணொளியில் இருந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதனை துணை காவல் கண்காணிப்பாளரான முஹமத் ஸாஹீத் குரேஷி உறுதி செய்துள்ளார். ஆனால் இதுவரை குற்றவாளிகளின் பெயர்கள் வெளியாகவில்லை.