பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர். நாட்டை உலுக்கும் கொடூர சம்பவங்களும் நடந்தது. அதன் பிறகு ராணுவங்கள் குவிக்கப்பட்டு ஓரளவு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆனாலும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிழக்கு மாவட்டங்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் கிராம தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மீண்டும் மணிப்பூரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.