பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ஒரே கார்டு என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேசிய காமன் மொபிலிட்டி கார்டு (NCMC) RuPay ரீலோடபிள் ப்ரீபெய்ட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்ரோ, பேருந்து, ரயில் மற்றும் வண்டி டிக்கெட்டுகளை இந்த அட்டை மூலம் வாங்கலாம். இந்த காண்டாக்ட்லெஸ் ப்ரீபெய்ட் கார்டு, டோல் மற்றும் பார்க்கிங் நேரத்திலும் பயனுள்ளதாக இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.