வயதானவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல வகையான பென்சன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெண் ஊழியர்கள் தங்களுக்கு பிறகு குடும்ப பென்ஷனை பெற தகுதியான நபர்களாக மகனையோ, மகளையோ பரிந்துரை செய்யலாம் என ஓய்வூதிய விதிமுறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

\இந்த திருத்தம், கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடுத்திருந்தாலோ, அந்த வழக்கு விசாரணையில் இருந்தாலோ சம்மந்தப்பட்ட பெண் ஊழியர் தனது குடும்ப ஓய்வூதியத்தை கணவருக்கு பதிலாக குழந்தைகளுக்கு வழங்க முடியும். எனவே இந்த திருத்தம் பெண் ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடியது என நலத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.