இந்தியாவில் தற்போது ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனைகள் அதிகமாகி விட்ட நிலையில் மறுபக்கம் பண மோசடிகளும் அதிகமாகிவிட்டது. இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முதலில் வங்கி சம்பந்தப்பட்ட விவரங்களை எதற்காகவும் யாருடனும் பகிரக்கூடாது. அதே சமயம் உங்களின் மொபைல் எண்ணுக்கு அவசியமில்லாமல் வரும் எந்த செய்தியையும் நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

இவ்வாறு கிளிக் செய்தால் உங்களுடைய வங்கியில் இருக்கும் பணம் அனைத்தும் திருடு போக அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயம் வங்கியின் மூலமாக ஏதாவது செய்தி அனுப்பினால் VM- ICICI Bank, AD- ICICIBN, JD- ICICIBK என்ற வடிவில் மட்டுமே இருக்கும். மேலும் பணம் திருடப்படும் நோக்கில் உங்களுக்கு அனுப்பப்படும் செய்தியில் பெரும்பாலான பிழைகள் இருக்கும். அதனை வைத்து எளிமையாக போலியான செய்திகளை நீங்கள் கண்டறிந்து விடலாம். எனவே தேவையில்லாமல் வரும் லிங்கை தொட்டு பணத்தை பறி கொடுக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.