தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடக மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வெப்ப அலை வீசி வரும் நிலையில் மே1 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு கடும் வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் , ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.