வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி அழுது கொண்டே இருந்துள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை அவருடைய தாயும் சகோதரியும் கடைக்கு மளிகை பொருள் வாங்க சென்றபோது தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.