தமிழகத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பொதுத் தேர்வு விடைத்தாள் செலுத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

அதனைப் போலவே 11 ஆம் வகுப்புக்கும் பத்தாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் தளத்தில் மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மதிப்பெண்களின் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மாணவர்களின் விவரங்களுடன் கணினி அறிவியல் மதிப்பெண் இணைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் அரச திட்டமிட்டபடி மே 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.