தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டி எஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்ற போது இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மே இரண்டாம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ள நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.