சென்னை பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக துறைகள், இணைப்பு கல்லூரிகள் மற்றும் அதன் ஆராய்ச்சி நிறுவனங்களில் M. Phil பட்டப்படிப்பை நிறுத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், இந்த அறிவிப்பு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. முந்தைய கல்வி ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் M.Phil படிப்பை முடிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.