கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 10 வயது சிறுவன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக விளங்கியுள்ளான். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தொண்டை பகுதியில் 5 நாணயம் சிக்கி இருந்தது உறுதியானது. தொண்டை பகுதியில் சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முடிவெடுத்து குறித்த நேரத்தில் சிறுவன் விளங்கிய நாணயத்தை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர்.