தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார். பாராட்டு விழாவில் பேசிய அவர், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. தோனி எனக்கு பலமுறை வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த நிலைக்கு வருவேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார்.