அதிமுக விருப்ப மனு வினியோகம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி மாலை 5 மணி வரை அதிமுக விருப்ப மனு விநியோகம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று மார்ச் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிப்ரவரி 21 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை வழங்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.