தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வந்த ராஜேந்திர சோழன் 21 வது அம்சம், புற்றில் உறையும் பாம்புகள் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். சிறிது காலமாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில் சென்னையில் இன்று காலை காலமானார். இவரது உடல் அவருடைய விருப்பப்படி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்கப்படுகின்றது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.