மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் தற்போது நேரில் சென்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளை தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

அதிமுக சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து கேபிஅன்பழகன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பிரேமலதாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 சீட்டு ஒதுக்கப்பட்டது. 2019-ல் வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகரில் தேமுதிக போட்டியிட்டது. கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் அதிமுகவும் பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது.