அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமிறல் வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் முதுகுளத்தூரில் அமமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து விதியை மீறி பிரச்சாரம் மேற்கொண்டதாக டிடிவி தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டது. குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இல்லை எனவும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கமுதி காவல் நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி தினகரன் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.