அதிக வாக்குகளை பெற்று தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்களின் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.