முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கதுறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளால், அவருடைய நீடிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், புழல்  சிறையில் இருந்தவாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதி எஸ்.அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது அவருடைய நீதிமன்ற காவலை மேலும் நாளை வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 28 வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாள் (மார்ச் 22 வரை) காவலை நீட்டித்து நீதிபதி அல்லி  உத்தரவிட்டுள்ளார்.