செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து சென்ற ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. கடந்த 2022ம் வருடம் பிப்ரவரி 26 ஆம் தேதி மதுவை விட்டொழித்தார் மனோகரன்.

இந்நிலையில் மதுவை விட்டொழித்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததை நினைவில் வைத்துக்கொண்டு, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடி வருகிறார் மனோகரன். குடியின் சீரழிவுகளை மற்றவருக்கு உணர்த்த, சிலர் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை என போஸ்டர் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக அவர் கூறினார்‌.