ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7:00 மணி முதல் மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வந்து வாக்கு வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடையன் காட்டு வலசு பகுதியில் உள்ள 138 மற்றும் 138-வது வாக்குச்சாவடிகளில் பண பட்டுவாடா நடைபெற்று வருவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் இன்ப துரை தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல் நடைபெறுவதாகவும் வாக்களிக்க வரும் மக்களுக்கு பணம் கொடுப்பதாகவும் இன்ப துரை குற்றம் சாட்டியுள்ளார்.