பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார் நடிகை த்ரிஷா. நேற்று த்ரிஷா தன் 40-வது பிறந்தநாளை கொண்டாடினார். அமீர் டைரக்டில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் வாயிலாக நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா.

தற்போது த்ரிஷாவின் சொத்து மதிப்பு, புது படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளம் போன்ற விவரங்கள் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளவரசி குந்தவையாக நடிப்பதற்கு அவர் ரூ.3 கோடி வரை சம்பளம் பெற்றாராம். அதேபோன்று தளபதிக்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்க ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு மாதம் ரூ.60 லட்சம், வருடத்திற்கு ரூ.9 கோடி வரை த்ரிஷா விளம்பரங்கள், படங்கள் வாயிலாக சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னையில் ரூ.6 கோடி மதிப்பிலான சொந்த வீடு, ஹைதராபாத்தில் ஒரு வீடு, ரியல் எஸ்டேட் வாயிலாகவும் அவர் சம்பாதிக்கிறாராம். இது தவிர ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், ரூ. 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் ரூபாய். 40 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார்கள் த்ரிஷாவிடம் இருக்கிறது. மொத்தத்தில் அவரின் சொத்து மதிப்பானது ரூ.70 முதல் ரூ.80 கோடி வரை உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.