இயக்குனர் மணிரத்னம் டைரக்டில் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன படம் பொன்னியின் செல்வன்-2. முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து 2-ஆம் பாகம் கடந்த வாரம் வெளிவந்தது.

முதல் காட்சியிலிருந்து கலவையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு கிடைத்தாலும், முதல் 4 நாட்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 வெளிவந்து 7 நாட்கள் ஆகியுள்ள சூழலில், இதுவரை ரூ. 235 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 85 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. முதல் பாகத்துடன் ஓப்பிடும்போது இது மிகக் குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.