தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி அந்த வழியாக வந்த தனியார் பேருந்து, இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்(30), கலைபிரியா(25) உள்ளிட்ட மூன்று பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசாரும், சுங்க சாவடி ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து காரணமாக தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.