இந்தியாவில் பல மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எதற்காக உணவை விட பழங்கள் மற்றும் பானங்களை மக்கள் உண்டு உடலை தேர்த்தி வருகின்றனர். இந்த காலத்தில் வீடுகளுக்குள் வெப்பத்தை தணிப்பதற்காக ஏசி மற்றும் ஏர் கூலர் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

கோடை வெப்பத்தை சமாளிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை வீட்டில் இருப்பவர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் ஒருவர் வீட்டில் உள்ள பிரிட்ஜை ஏசியாக பயன்படுத்தியுள்ளார். அதாவது ஃப்ரிட்ஜை திறந்து வைத்து அதற்கு முன்னால் ஏர் கூலரை வைத்து அந்த நபர் நிம்மதியாக உறங்குகின்றார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.