இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. அதனால் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்கள் தப்பிக்கும் வகையில் அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னரே கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது கடும் வெப்பம் நிலவும் நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை 55 வயதிற்கு மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் நீண்ட நாள் நோய் உள்ளவர்கள், பெறும் நோய்க்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் பணியில் ஈடுபட வேண்டாம் எனவும் இவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பணியில் ஈடுபடுவதற்காக தளர்வுகள் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.