சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசகுட்டை பகுதியில் வசிப்பவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி கவியரசி, பிரபா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் பெற்றோர்கள் இருவரும வெளியே சென்று விட்டார்களாம். அப்போது வீட்டில் இருந்த கவியரசி பிரபா இருவரும் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது பிரபா டிவி ரிமோட்டை உடைத்துள்ளார். இதனால் பெற்றோர்கள் வந்து தன்னை அடிப்பார்கள் என்று பயத்தில் பிரபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்று திரும்பி வந்து பார்த்த பெற்றோர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சிறிய விஷயத்திற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.