வேலூர் மாவட்டம் கேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள பெட்டி கடையிலிருந்து பிரபல மாஷா நிறுவனத்தின் 10 ரூபாய் ஜூஸ் பாக்கெட்களை வாங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்து சீனிவாசனின் மகன் ஸ்ட்ராவை ஜூஸ் டப்பாவில் போட்டு குடிக்க தொடங்கிய போது கசப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அந்த ஜூஸ் பாக்கெட்டை வெட்டிப் பார்த்தபோது அதன் உள்ளே குட்டி எலி செத்து கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் அதனை  காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

https://twitter.com/SeithisolaiNews/status/1688604968570466304